ஜெயலலிதா நினைவு இல்லம் ஆகிறது 'வேதா இல்லம்'. விரைவில் அறிவிப்பு?

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், அதிமுக வங்கிக்கணக்கு முடக்கம் ஆகியவை எதிர்த்தரப்பினர் கூட எதிராபாத அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் இன்னொரு முக்கிய அறிவிப்பு என்னவெனில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான்.

தமிழக மக்களின் இந்த ஆசையும் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'வேதா இல்லம்' நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று விரைவில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பார் என்று முதல்வரின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது போயஸ் கார்டனில் உள்ள 'வேதா இல்லத்தில் சசிகலா வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மும்பையில் இருந்து கிளம்பினார் ஆளுனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வருடன் சந்திப்பா?

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு சற்று முன்னர் கிளம்பினார். அவர் இன்று பிற்பகல் 3மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஓபிஎஸ்-க்கு எதிராக போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம். உருவ பொம்மை எரிக்க முயற்சி

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திய வினாடியில் இருந்து தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை பிடிக்க சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளனர்...

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளி. இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வகையில் உடனடியாக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ், தமிழகம் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளி செய்து வருகின்றனர்...

முதல்வர் கடிதம் கிடைத்ததும் வங்கி கணக்கு முடக்கப்படும். பேங்க் ஆப் இந்தியா மேலாளர் அதிரடி

அதிமுக பொருளாளராக இருக்கும் தன்னை நீக்க தற்காலிக பொதுசெயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், தான் இன்னும் பொருளாளராகவே தொடர்வதால் தன்னுடைய அனுமதியின்றி ஒரு ரூபாய் அதிமுக வங்கிக்கணக்கில் பணம் எடுக்க அனுமதிக்ககூடாது என்றும் அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வங்கி அதிகாரிக்க்கு கடிதம் எழுதியிருந்தார

கனடாவுக்கு வாருங்கள். டொரண்டோ மேயர் அழைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கனடா தலைநகர் டொரண்டோ சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் டொரண்டோ மேயர் ஜான் டிராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்...