மீண்டும் அஜித்துக்கு வில்லனாக மாறிய 'வேதாளம்' புகழ் கபீர்சிங்

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

கோலிவுட் ரசிகர்களுக்கு கபீர்சிங் என்ற நடிகர் ஒருவர் இருக்கின்றார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில் அஜித்தின் 'வேதாளம்' என்ற ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட நடிகராக மாறிவிட்டார். மீண்டும் அஜித்துடன் நடிக்க ஆவலுடன் இருப்பதாக அவ்வப்போது பேட்டியில் தெரிவித்து கொண்டிருந்த கபீர்சிங் அவர்களுக்கு தற்போது அப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இளையதளபதி விஜய் ரசிகர்கள் இணைந்து '3 ரசிகர்கள்' என்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கியது போல தல அஜித் ரசிகர்கள் இணைந்து உருவாக்கவுள்ள திரைப்படம் 'தல போல வருமா' இந்த படத்தில் வில்லனாக கபீர்சிங் நடிக்கவுள்ளார்.

அஜித்தின் ரசிகர் கேஎம் தேஜாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை அஜித் ரசிகர்களான சுராஜ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு குணசீலன் ஒளிப்பதிவு செய்கிறார்

இந்த படத்தில் நடிப்பது மீண்டும் அஜித்துடன் நடிப்பதை போன்றே உணர்வதாக கபீர்சிங் கூறியுள்ளார்.

More News

டெல்லியில் மத்திய அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனதுக்கு தோன்றிய, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்...

சசிகலாவை அடுத்து சிறைக்கு செல்லும் தமிழக தலைவர் இவர்தான். சுப்பிரமணியன் சுவாமி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு செல்ல காரணமான வழக்கை பதிவு செய்தவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

ஈரான் இயக்குனரின் படத்தில் தென்னிந்திய நடிகை

உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மஜித்மஜிதி குறித்து சினிமா ரசிகர்கள் தெரிந்திராமல் இருந்திருக்க முடியாது.

இனிமேல் படங்கள் இயக்க வேண்டாம். தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த படம் குறித்து பாசிட்டிவ் ஆக ஒரே ஒரு குரல் கொடுத்தால் அந்த வாய்ஸ்க்கு இருக்கும் மதிப்பே தனி. சமீபத்தில் கூட இளையதலைமுறை இயக்குனர்களின் படங்களுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்க, அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி இவர்கள்தான்!!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.