இன்று 'வீர தீர சூரன்' ரிலீஸ்.. நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் படக்குழு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விக்ரம் நடித்த ’வீர தீரன் சூரன்’ திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இந்த படத்தின் ரிலீஸுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இன்று காலை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது படக்குழுவினர் சாதகமான உத்தரவு வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
மார்ச் 27 அன்று ’வீர தீரன் சூரன்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, புரமோஷன் பணிகளும் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவிருந்ததாகவும், அதற்கான முன்பதிவு நடைபெற்றிருந்ததாகவும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கிய பி4யூ என்ற நிறுவனம், ஓடிடி ரிலீஸ் ஒப்பந்தம் பெற்றுள்ள நிலையில், ஓடிடி உரிமை விற்பதற்கு முன்பே படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று காலை 10:30 மணி வரை ’வீர தீரன் சூரன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. இன்று காலை இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர், உடன்பாடு ஏற்பட்டால் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்கும். இல்லையெனில் ரிலீஸ் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இன்று காலை 9 மணிக்கு திரையிடப்படவிருந்த காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும், முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்குமா? இன்று ’வீர தீரன் சூரன்’ படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments