மும்பையில் 'வீட்ல விசேஷங்க' டிரைலர்: ஆர்ஜே பாலாஜிக்கு இது 3வது முறை!

ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் ஐபிஎல் போட்டியின்போது ஒளிபரப்ப இருப்பதாகவும் இதற்காக மும்பை சென்றிருப்பதாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’நான் நடித்த ‘எல்கேஜி’ மற்றும் 'மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் டிரைலர்களும் ஐபிஎல் போட்டியின்போது தான் வெளியானது என்றும் இப்போது மூன்றாவது முறையாக நாளை நடைபெறவிருக்கும் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் இடையிலான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியின் போது ’வீட்ல விசேஷங்க’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாகவும் இதற்காக தான் மும்பை சென்று கொண்டிருப்பதாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார் .

‘எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ போல் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்துள்ள ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

More News

நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்: செம ரொமான்ஸ் வீடியோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிய வீடியோவை தனது இன்ஸ்டாவில்

'தளபதி 66' படத்தில் இணைகிறாரா இந்த பிரபல நடிகை? ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் ஏற்கனவே நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா: இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் 

திருமணம் செய்யாமலேயே செட்டில் ஆகிவிட்டேன்: ஷங்கர் பட நாயகி பேட்டி!

திருமணம் செய்து எப்போது செட்டில் ஆவீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு திருமணம் செய்யாமலேயே நான் செட்டில் ஆகிவிட்டேன் என்று ஷங்கர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை தெரியுமா

கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.