நீட் தேர்வுக்கு 3வது பலி: சேலம் மாணவி தற்கொலை!

  • IndiaGlitz, [Wednesday,September 15 2021]

தமிழகத்தில் ஏற்கனவே நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட்தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் நீட் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரண்டு மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு கடினமாக இருந்ததாகவும் அந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்காது என்றும் மாணவி சவுந்தர்யா கடந்த இரண்டு நாட்களாக சோகத்த்ஹில் இருந்ததாகவும் இன்று அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் மூன்று இளம் உயிர்கள் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

'லிப்ட்' பட பிரச்சனை குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

கவின் நடித்த 'லிப்ட்' என்ற திரைப்படத்தின் பிரச்சனை குறித்து லிப்ரா புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

தலைமுடிக்குப் பதிலாகத் தங்கச்சங்கிலி? ராப் பாடகரைப் பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்!

மெக்சிகோவை சேர்ந்த ராப் பாடகர் ஒருவர் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொள்ள நினைத்து புது முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

முழு ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா… ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கை கிரிக்கெட் அணியில் டெத்-ஓவர் பவுலர் எனப் பெயர் பெற்ற லசித் மலிங்கா அனைத்துவிதப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மெட் காலா 2021… கண்ணைப் பறிக்கும் உடைகளில் ஹாலிவுட் பிரபலங்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரிய அருங்காட்சியகத்தில் “மெட் காலா 2021“

எகிப்து பிரமிடுகளுக்கு நிகரான அதிசயங்கள்: காளகஸ்தி கோவில் குறித்து தமிழ் நடிகை!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபலமான இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி', தளபதி விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்',