close
Choose your channels

நீட் தேர்வுக்கு 3வது பலி: சேலம் மாணவி தற்கொலை!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏற்கனவே நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட்தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் நீட் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரண்டு மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு கடினமாக இருந்ததாகவும் அந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்காது என்றும் மாணவி சவுந்தர்யா கடந்த இரண்டு நாட்களாக சோகத்த்ஹில் இருந்ததாகவும் இன்று அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் மூன்று இளம் உயிர்கள் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.