ரஜினியை வம்புக்கிழுத்த பிரபல இயக்குனருக்கு வெங்கட்பிரபு பதிலடி

  • IndiaGlitz, [Wednesday,June 15 2016]

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வாங்கிக்கட்டி கொள்வது என்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான். இம்முறை அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பையும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியையும் வம்புக்கு இழுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அமிதாப்பின் Te3n திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் வெகுசுமாராகவே இருந்திருக்கும். அதேபோல் ரஜினிகாந்த் நடித்து வரும் ரோபோ படத்தில் அமிதாப் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ரஜினி Te3n படத்தில் நடித்திருந்தால் அது 1. இதுவே அமிதாப் ரோபோவில் நடித்தால் அது 100. இந்த கருத்தை ரஜினியும் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.
ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குனருமாகிய வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில், 'சார், உங்களால் மட்டுமே ஷோலே போன்ற படத்தை ஃபிளாப் ஆக்க முடியும். ஆனால் எங்கள் சூப்பர் ஸ்டார் Te3n படத்தில் நடித்திருந்தாலும் சாதனை படைத்திருப்பார்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

More News

பிறந்தநாள் அன்று எங்கு இருப்பார் விஜய்

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் அவருடைய இந்த வருட பிறந்த நாளை மிக பிரமாண்டமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்...

டாப்ஸியின் முதுகில் இருப்பது என்ன?

தனுஷின் 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை டாப்சி...

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் எப்போது?

கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களில் நடித்த ஜெயம் ரவி இந்த வருடம் இதுவரை 'மிருதன்' படத்தில் மட்டுமே நடித்துள்ளார்...

சுந்தர் சிக்கு வில்லனான பிரபல காமெடி நடிகர்

கோலிவுட் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின்னர் 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் விடிவி கணேஷ்...

ரஜினி பிறந்த நாளில் லைகா தரும் இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் நடித்துள்ள 'கபாலி' படத்தின் செய்திகளே இணையதளங்களில் தினமும் டிரெண்டை ஏற்படுத்தி வரும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான '2.0' படத்தின் செய்திகளும் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது...