close
Choose your channels

'மாநாடு' படம் குறித்த செய்திக்கு நக்கலுடன் பதிலளித்த வெங்கட்பிரபு!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஊடகம் ஒன்று ’மாநாடு’ படம் குறித்த செய்தியை வெளியிட்டு இருந்த நிலையில் அந்த செய்திக்கு நக்கலுடன் இயக்குனர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’. இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருந்த நிலையில் திடீரென நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டீசரை பார்த்த ஒரு சிலர் இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என்று கூறி வருகின்றனர். இதனை பிரபல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்திக்கு பதிலாக இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் சிரிக்கும் எமோஜிக்களை பதிவுசெய்து நக்கலடித்ததை அடுத்து அந்த ஊடகம் அந்த செய்தியை நீக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் ஏற்கனவே இந்த படம் கொரியன் படத்தின் காப்பி அல்ல என்றும், இந்த படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.