வெங்கட்பிரபு வெளியிட்ட சிவாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

நடிகர் சிவா நடித்த 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கிய 'பார்ட்டி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா நடித்து கொண்டிருக்கும் 'சுமோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'அகில உலக சுப்பர் ஸ்டார் சிவாவின் புதிய அவதாரம் என்று வெங்கட்பிரபு குறிப்பிட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் சிவா வித்தியாசமான போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். சிவா ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இந்த படத்தை எஸ்பி ஹோஸ்வின் இயக்கி வருகிறார். நிவாஸ் பிரச்சன்னா இசையில் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை நடிகர் சிவாவே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிகிலுக்கு கொடுக்கும் எழுச்சியை இதற்கும் கொடுங்கள்: நடிகர் விவேக் வேண்டுகோள்

பிகில் படத்திற்கு கொடுக்கும் எழுச்சியை தாய் மண்ணுக்காகவும் மரங்களுக்காகவும் கொடுக்க வேண்டும் என நடிகர் விவேக், மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7 வயது சிறுவனுக்கு 526 பற்கள்: சென்னை டாக்டர்கள் அதிர்ச்சி

சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனுக்கு 526 பற்கள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைவாரா ஆஸ்கார் நாயகன்?

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 60' படத்தின்

உணவுக்கு மதம் கிடையாது: ஜொமைட்டோ பதிலடிக்கு வாடிக்கையாளர்கள் ரியாக்சன்

ஆன்லைனில் உணவு சப்ளை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜொமைட்டோ. இந்த நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் தன்னுடைய உணவை இந்து அல்லாத ஒருவர் டெலிவரி செய்தால்

நான் தான் உண்மையான 'அண்ணாமலை' பால்காரன்: எச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்த் ரீல் வாழ்க்கையில் மட்டுமே அண்ணாமலை என்றும் மாட்டுத்தொழுவத்திலேயே பிறந்து வளர்ந்த தான் நிஜ வாழ்க்கையில் அண்ணாமலை என்றும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.