close
Choose your channels

இதை மட்டும் செய்யாதீங்க: 'மாநாடு' படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!

Sunday, November 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘மாநாடு’ திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வரும் ரசிகர்கள் தயவு செய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அடாது மழையிலும் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து உள்ளதன் காரணமாக இந்த படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 14 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு மட்டுமின்றி வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் மொபைல்போனில் படத்தின் காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது ஒரு குற்றச் செயல் என்றும் திரையரங்குகளில் சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.