close
Choose your channels

எஸ்ஜே.சூர்யா வேடத்தில் நடிக்க இருந்தவர் இந்த நடிகரா? 'மாநாடு' இயக்குனரின் ஆச்சரியமான தகவல்

Friday, November 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய ‘மாநாடு’ திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று ரிலீசானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவை அடுத்து இந்த படத்தில் மிக அதிகமாக கவர்ந்தவர் எஸ்ஜே சூர்யா என்பதும் அவரது டிசிபி தனுஷ்கோடி என்ற கேரக்டர் இந்த படத்தின் முதுகெலும்பு என்று கூறினால் அது மிகையாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் டிசிபி தனுஷ்கோடி என்ற எஸ்ஜே சூர்யாவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் அரவிந்த்சாமி என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானது மற்றும் ஒரு சில காரணங்களால் அரவிந்தசாமி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அதன் பிறகுதான் எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் இணைந்தார் என்றும் வெங்கட்பிரபு கூறினார். மேலும் எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் இணைந்தவுடன் அந்த கேரக்டருக்கு அவர் மிக பொருத்தமாக இருந்தது நான் கண்டு கொண்டேன் என்றும் அவருக்காகவே சில வசனங்கள் எழுதப்பட்டது என்றும் இந்த கேரக்டர் வேற லெவலுக்கு அவரது நடிப்பு கொண்டு போனது என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

‘மாநாடு’ படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் அரவிந்த்சாமி என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.