அஜித்துடன் இணைவது எப்போது: வெங்கட்பிரபு பதில்

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மங்காத்தா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அஜித் மற்றும் வெங்கட்பிரபு இணைவது எப்போது? என்றும் 'மங்காத்தா 2’ எப்போது என்றும் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

இந்த நிலையில் 'மங்காத்தா 2 ’ திரைப்படத்தின் கதை தயாராக இருப்பதாகவும் அஜித் எப்போது ஓகே சொன்னாலும் உடனே அந்த படத்தை இயக்க தயார் என்றும் வெங்கட்பிரபு பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அஜீத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது அஜித் எப்போது கூப்பிட்டாலும் ஆட்டத்துக்கு தயார் என்றும் அவருடன் பணி வருவது அண்ணன் தம்பியுடன் பணி புரிவது போன்று சுதந்திரமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் அஜித் தற்போது ’விஸ்வாசம்’ படத்திற்கு பிறகு ஃபேமிலி சென்டிமென்ட் கதையில் நடித்து வருகிறார் என்றும், அது ‘வலிமை’ வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் வெங்கட்பிரபு கூறினார்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘அஜித் 61’ படத்தில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுவதால் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ‘மங்காத்தா 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நீச்சல் குளம், ஹெலிபேட் கொண்ட கார்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிசயம்!

அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட ஒரு கார் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்தச் சாதனையைவிட

கடும் பொருளாதார இழப்பை சந்திக்க இருக்கும் சீனா… மீண்டும் பரவும் கொரோனா!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் துவங்கிய

சமந்தாவை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்து சென்ற பிரபல நடிகர்: வைரல் வீடியோ

நடிகை சமந்தாவை பத்திரிக்கையாளர் மற்றும் போட்டோகிராஃபர்களிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பாக பிரபல நடிகர் ஒருவர் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்: எந்த படத்திற்கு இந்த மாஸ் ஸ்டில்?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள படத்தின் மாஸ் ஸ்டில் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இமயமலை ரிஷிகேஷில் தொழிலதிபரை திருமணம் செய்த பாடகி!

பிரபல பாடகி இமயமலை ரிஷிகேஷ் பகுதியில் பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.