கொஞ்சமாவது வளருங்கள்.. சுயபுத்தியே இல்லையா? விமர்சனம் செய்த ரசிகருக்கு வெங்கடேஷ் பட் பதிலடி..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் குறித்து ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு ’உங்களுக்கு சுய புத்தி இல்லையா? கொஞ்சமாவது வளருங்கள்’ என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. 10 குக்குகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், கிஷோர் மற்றும் காளையன் ஆகிய இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 8 குக்குகள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நான்கு சீசன்களிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செப் வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார்கள் என்பதும் இவர்கள் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கோமாளிகளை விரட்டி விரட்டி அடிக்கும் வெங்கடேஷ் பட் சிறந்த எண்டர்டெயினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலேசியாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் வெங்கடேஷ் பட் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். ’இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருங்கள், கோமாளிகள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நிறுத்துங்கள், மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள், நீங்கள் இதையெல்லாம் வெறும் ஜாலிக்காக மட்டுமே செய்கிறேன் என்று சொன்னால் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெங்கடேஷ் பட், ‘இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம். கவுண்டமணி செந்திலை அடிக்கவில்லையா? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா? டாம் அண்ட் ஜெர்ரி உங்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறதா? கொஞ்சமாவது வளருங்கள், இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னேன் என்பதற்காக விஷத்தை எடுத்து நீங்கள் குடித்து விடுவீர்களா? உங்களுக்கு என்று சுயபுத்தி கிடையாதா? என்று கூறியுள்ளார். வெங்கடேஷ் பட் அவர்களின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அது உன் தங்கச்சி ப்ரண்டு.. நடிகரை எச்சரித்த தங்கை..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு நடிகர் பிரேம்ஜி கமெண்ட் செய்துள்ள நிலையில் அந்த கமெண்ட்டுக்கு அது

திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள்.. மனைவி மகாலட்சுமிக்கு விலை மதிப்பில்லா பரிசு கொடுத்த ரவீந்தர்..!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை

நீச்சலுடை காஸ்ட்யூம்.. கமல்ஹாசனின் முன்னாள் மனைவிக்கு பாராட்டு தெரிவித்த நடிகை..!

நீச்சலுடைய காஸ்ட்யூம்களை சிறப்பாக வடிவமைத்து கொடுத்த காஸ்டியூம் டிசைனரான கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதிக்கு பாராட்டு தெரிவித்து நடிகை ராதா தனது

தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சிம்ரனின் இரண்டாவது மகனா இவர்? புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..!

நடிகை சிம்ரனின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.