close
Choose your channels

என்னை கிண்டல் செய்வதாக நினைத்து தரத்தை தாழ்த்தி கொள்ள வேண்டாம்: வெங்கடேஷ் பட்

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் ’கடந்த வார நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது என்று கூறினார். இந்த தகவலை பலர் ஆச்சரியப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் ஒரு சிலர் இந்த தகவலை கேலியும் கிண்டலும் செய்து மீம்ஸ்களை பதிவு செய்தனர். அவர்களுக்கு சரியான பதிலடியை வெங்கடேஷ் பட் கொடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்கூறியபோது 'இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒரு பெண் தனது மன அழுத்தத்தைப் போக்கினார் என்றும், அதன் மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது என்றும், ஐவிஎஃப் சிகிச்சைக்கு மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த தகவலை மருத்துவர்களும் ஒப்புக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த ஆச்சரியமான தகவலை ஒரு சிலர் கிண்டலடித்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தால் எப்படி குழந்தை பிறக்கும்? என்று மீம்ஸ்களையும் பதிவு செய்து கிண்டலடித்தனர். அந்த மீம்ஸ்களுக்கு பதிலடி கொடுத்துள்ள வெங்கடேஷ் பட் ’இரண்டு நாட்கள் நிஜமாகவே உடைந்து போனேன். என்னை ட்ரோல் செய்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன். மனித நேயம் செத்து விட்டதாக அந்த மீம்ஸ்கள் என்னை உணர வைத்தது.

குழந்தைச் செல்வம் உள்ளவர்களுக்கு அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று தெரியும். குழந்தை இல்லாதவர்களைப் பற்றி யோசித்து பாருங்கள். என்னை கிண்டல் செய்வதாக நினைத்து உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்’ என்று கூறியுள்ளார். வெங்கடேஷ் பட் அவர்களின் இந்த பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.