close
Choose your channels

விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடலை தெலுங்கில் பாடியவர் யார் தெரியுமா?

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது தெரிந்ததே. தெலுங்கில் இந்த படத்திற்கு ‘விசில்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படத்தில் தளபதி விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் சூப்பர்ஹிட் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து இந்த பாடலின் தெலுங்கு பதிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தமிழில் விஜய் பாடிய ‘வெறித்தனம்’ என்ற பாடல் தெலுங்கில் ’வெறிக்கிடம்’ என்று தொடங்குகிறது. இந்த பாடலை தெலுங்கில் ரேவந்த் என்ற பாடகர் பாடியுள்ளார். இந்த பாடலை ரேகுண்டு மெளலி என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது தெலுங்கு மாநிலங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.