close
Choose your channels

செளகார் ஜானகி பேத்தி வைஷ்ணவியின் மகளா இவர்? வைரல் புகைப்படங்கள்..!

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள நிலையில் அவருடைய மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருபவர் நடிகை சௌகார் ஜானகி என்பதும் சமீபத்தில் ’பிஸ்கோத்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி அரவிந்த் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’ஒரு வீடு இரு வாசல்’ என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி கடந்த 1996 ஆம் ஆண்டு அரவிந்த் கமலநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதிதி மற்றும் மேகனா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வைஷ்ணவியின் மகள்கள் புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.