ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்ட எம்ஜிஆர்-சிவாஜி படத்தயாரிப்பாளரின் பேத்தி!

எம்ஜிஆர், சிவாஜி நடித்த ஒருசில படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஜிஎன் வேலுமணி அவர்களின் பேத்தி தனது குடும்பத்துடன் கேரளாவில் தவித்து கொண்டிருப்பதாகவும், அவர் தனது சொந்த ஊருக்கு வர ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டு எழுதிய கடிதம் ஒன்றை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மற்றும் கேரள முதல்வர் ஆகியோர், ஜிஎன் வேலுமணி குடும்பம் சொந்த ஊருக்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும், அந்த குடும்பத்திற்கு தன்னால் முயன்ற உதவியை செய்ய தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜிஎன் வேலுமணி பேத்தி புவனா என்பவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மதிப்பிற்குரிய திரு. ராகவா லாரன்ஸ்‌ அவர்களுக்கு, மறைந்த திரைப்பட தயாரிப்பாளர்‌ - ஜிஎன் வேலுமணி (சரவணா ஃபிலிம்ஸ்‌) அவர்களின்‌ பேத்தி, புவனா சரவணன்‌ எழுதுவது.

படகோட்டி, பணத்தோட்டம்‌, கலங்கரை விளக்கம்‌, சந்திரோதயம்‌, குடியிருந்த கோயில்‌, பாலும்‌ பழமும்‌, பாதகாணிக்கை, பாகப்பிரிவினை, பஞ்சவர்ணகிளி, போன்ற பல வெற்றிப்‌ படங்களை தயாரித்து, புரட்சி தலைவரின்‌, புரட்சி தலைவியின்‌ பெரும்‌ அபிமானம்‌ பெற்றவர்‌ எனது தாத்தா ஜிஎன் வேலுமணி என்பது எல்லோரும்‌ அறிவார்கள்‌. தற்சமயம்‌ நானும்‌, எனது தாயாரும்‌ மிகவும்‌ கஷ்டமான, மோசமான நிலையில்‌ உள்ளோம்‌. எனது தாயார்‌, 69 வயது ஆகிறது. ரத்த வாதத்தினால்‌ மிகவும்‌ அவதிப்படுகிறார்‌. தற்சமயம்‌, நாங்கள்‌ கேரளாவில்‌ உள்ளோம்‌. இங்கே எங்களுக்கு உதவி செய்ய யாரும்‌ இல்லை.

தங்குவதற்கு வீடு இல்லாமல்‌, உண்ண உணவு இல்லாமல்‌, மிகவும்‌ கஷ்டத்தில்‌ உள்ளோம்‌. நானும்‌, எனது தாயாரும்‌, மிகவும்‌ கஷ்டமான சூழ்நிலையில்‌ அவதிப்படுகிறோம்‌. எங்களை காப்பாற்றுங்கள்‌. நானும்‌ எனது தாயாரும்‌ எங்களது ஊரான கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லவும்‌, தங்குவதற்கு ஒரு வீடும்‌ பெற உங்களின்‌ உதவியை நாடி இக்கடிதத்தை அனுப்புகிறேன்‌. ஆந்திரவாசிகளை, இதர தேச வாசிகளை அந்தந்த முதல்வர்களிடம்‌ பேசி சொந்த ஊர்‌ அனுப்பி வைத்தீர்கள்‌ பத்திரிகை ஊடகங்களில்‌ பார்த்தேன்‌. கேரளாவில்‌ ஆதரவின்றி தவித்து கொண்டுள்ளோம்‌. தயாரிப்பாளர்கள்‌ வாட்ஸ்‌அப்‌ மூலம்‌ தெரிவிக்கிறோம்‌. நம்‌ முதல்வரிடம்‌ பேசி சொந்த ஊர்‌ அனுப்ப உதவுங்கள்‌. சாப்பாடு கூட இல்லை. நான்‌ பெண்ணாக இருப்பதால்‌ முடியவில்லை. ப்ளீஸ்‌ கேரளாவில்‌ உள்ள எங்களை மீட்கவும்‌.

உங்களைத்‌ தவிர எங்களை காப்பாற்று யாரும்‌ இல்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள்‌. உங்களிடம்‌ கை ஏந்தி மண்டியிட்டு எங்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்‌, எங்களை காப்பாற்றுங்கள்‌.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

முட்டையை செங்குத்தாக நிறுத்த முடியுமா??? இதுல கின்னஸ் சாதனையே பண்ணலாம்- இளைஞர் சாதனை!!!

இந்தத் தலைப்பை பார்த்தவுடன் எப்படிங்க முட்டையை செங்குத்தா நிறுத்த முடியும் என்ற சந்தேகம் தான் வரும்.

ஒபாமாவின் திட்டத்துக்கு முடிவுக்கட்டும் அதிபர் ட்ரம்ப்!!! பரபரப்பு நிகழ்வுகள்!!!

உலகமே கொரோனா பீதியில் இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கணிப்புகளையும் மக்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்தியா தரப்பில் இனிமேல் ஒருவர் கூட சாகக்கூடாது!!! அதிரடி முடிவெடுத்த இந்திய இராணுவம்!!!

திங்கள் கிழமை (ஜுன் 15) இந்திய எல்லைப் பகுதியில் நடைபெற்ற சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி விட்டது.

No questions: பல கேள்விகளுக்கு சீனா தரப்பில் பதில் ஏதும் இல்லை!!! தொடரும் மர்மம்!!!

கல்வான் தாக்குதல் தொடர்பாக சீன வெளியுறவுத் துறையிடம் தொடர்ந்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி செய்த ரஜினி ரசிகர்கள்

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த சிறுவனின் குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது