சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிவாஜி, கமல், ரஜினி பட நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,August 03 2022]

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாக இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா இணைந்து உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் நடித்த ’கீழ்வானம் சிவக்கும்’ கமல்ஹாசன் நடித்த ’மரோசரித்ரா’ ரஜினிகாந்த் நடித்த ’நெற்றிக்கண்’ உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக சரிதா நடித்துள்ளார் என்பதும் விஜய்யின் ’ப்ரெண்ட்ஸ்’ உள்பட இளைய தலைமுறை நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பரத் ஷங்கர் இசையில் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'பீஸ்ட்' நடிகர்!

ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 30வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன.

கமல்ஹாசனுடன் ஜோடி சேர்கிறாரா பாலிவுட்-ஹாலிவுட் நடிகை?

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல் படம் வெளியாகும் முன்னரே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த நடிகை!

பிரபல இயக்குனர் ஒருவரின் மகள் நடிகையாக அறிமுகமான நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழங்கால் அளவில் பாவாடை அணிந்து படவிழாவுக்கு வந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட விழாவுக்கு பாவாடையுடன் வந்ததையடுத்து திரைப்பட விழா குழுவினர் உள்பட ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்தனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ

ஒரே நாளில் முடிவு செய்து அவசர அவசரமாக நடந்த கல்யாணம்: பிரபல சீரியல் நடிகை

தனது திருமணம் ஒரே நாளில் திட்டமிட்டு அவசர அவசரமாக நடந்ததாகவும், பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை