பிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜூ காலமானார்.

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 68. சிவாஜிகணேசன், சத்யராஜ் நடித்த 'ஜல்லிக்கட்டு', 'ரஜினிகாந்த் நடித்த 'தர்மத்தின் தலைவன்,' கமல்ஹாசன் நடித்த 'சூரசம்ஹாரம்', சத்யராஜ் நடித்த 'ஜீவா', உள்பட பல தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகர் கேப்டன் ராஜூ உடல்நல குறைவால் இன்று அதிகாலையில் கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார் .அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ளது. அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:.

“நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் , பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றும் வேளையிலேயே கலை ஆர்வத்தால் நண்பர்களுடன் சேர்ந்து மும்பையில் நாடகக்குழு அமைத்து நாடகங்களில் நடித்து வந்தார். 1980- ல் ‘ரத்தம்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார் . கடந்த 37 ஆண்டுகளில் ஐநூறுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘இதா ஒரு சினேக கதா‘ என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார்.

மேலும் அனைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார் படங்களிலும் வில்லனாக நடித்தும் புகழ் பெற்றவர் . தர்மத்தின் தலைவன் ,சூரசம்ஹாரம் , ஜீவா ,என் ஜீவன் பாடுது ,ராஜகுமாரன் ஆகியவை தமிழில் அவரது முக்கிய படங்களாகும். என்றும் நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைத்துறைக்கு ஈடு கட்ட முடியாத /இயலாத மாபெரும் இழப்பாகும் .அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது உற்றார் உறவினர்கள் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ”.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

'மூன்றாவது கண்' என்பது காலத்தின் கட்டாயம்: விக்ரம்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இரவில் மட்டுமின்றி பகலிலும் தற்போது கொலை, கொள்ளை,

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய்-விக்ரம் நாயகி

நடிகர் சிம்பு தற்போது ஒரே நேரத்தில் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' மற்றும் சுந்தர் சியின் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை' டீசர் விமர்சனம்

விக்ரம்பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜார்ஜியாவில் சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.