close
Choose your channels

"சொல்லின் செல்வர்" சத்தியசீலன் அவர்கள் காலமானார்....!

Saturday, July 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூத்த தமிழறிஞரான சோ.சத்தியசீலன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர் என்ற பல திறமைகளால் தமிழில் ஆட்சி புரிந்தவர் தான் சத்தியசீலன். சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இவர், பள்ளி ஆசிரியராக பணியை துவங்கினார். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தமிழ்ப்பணியாற்றிய இவருக்கு, தமிழக அரசு "கலைமாமணி, சொல்லின் செல்வர்" உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தது. தமிழில் 40-திற்கும் அதிகமான நூல்களையும், ஆங்கிலத்தில் 3 நூல்களையும் எழுதியுள்ளார். வள்ளலார் பற்றி இவர் பேசிய தொகுப்பானது, ஆறு ஒலிநாடாக்களாக வெளிவந்துள்ளது,

இந்நிலையில் சத்தியசீலன் அவர்கள் இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலானது, சொந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.