வெற்றிமாறனின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட தனுஷ்!

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கவிருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் சோதனை படப்பிடிப்பு இடையிடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். ‘அனல் மேலே பனித்துளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராஜா முகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 

More News

அஜித் படத்திற்காக தோனி ஸ்டைலில் வேலை செய்ய போகிறேன்: விக்னேஷ் சிவன்

அஜித்தின் 62வது படத்தை இயக்கயிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், 'தல தோனி பாணியில் 'அஜித் 62' படத்தில் பணிபுரிய இருக்கிறேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கமல்ஹாசனின் 'விக்ரம்' படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் வீடியோ!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள

ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் ஜூலி: வைரல் வீடியோ

ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் வகையில் பிக் பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? ஆச்சரிய தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்'  என்ற திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம்கள்: திடுக்கிடும் தகவல் அளித்த தோழி

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம்கள் இருந்ததை நானே பார்த்து உள்ளேன் என்று அவரது தோழி ரேகா நாயர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .