close
Choose your channels

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நா.முத்துகுமார் கனெக்சன்

Thursday, October 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படம் மறைந்த பிரபல பாடலாசிரியர் நா முத்துகுமார் எழுதிய ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற கவிதைத்தொகுப்பு தான் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஒரு வயதான மனிதர் இறந்தவுடன் அவரது இறுதிச்சடங்கிற்குமுன் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படமும் ‘வெக்கை’ என்ற நாவலை தழுவி தயாரான நிலையில் அவருடைய அடுத்த படம் ‘பட்டாம்பூச்சி’யில் இருந்து தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.