சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தில் இணையும் பிரபல இயக்குனர்: வெற்றிமாறன் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,November 06 2023]

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது ’கங்குவா’ என்ற படம் உருவாகி வருகிறது. இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் பிரபல இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்றும், அப்போதே ‘வாடிவாசல்’ படத்தில், அவரை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்து விட்டதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் அமீர், சூர்யா ஒரே படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாடிவாசல்’ திரைப்படத்தில் அமீர் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பிரதீப் வெளியேற்றம் குறித்து பிக்பாஸ் கருத்து: அதிர்ச்சியில் மாயா-பூர்ணிமா கேங்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் அனுப்பப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பீச் மணலில் வாகனம் ஓட்டும் கீர்த்தி சுரேஷ்.. செம்ம த்ரில் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் பீச்சில் வாகனம் ஓட்டும் த்ரில் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வடிவேலு காமெடி வீடியோவை பதிவு செய்து நன்றி சொன்ன பிரதீப்.. குவியும் வாழ்த்துக்கள்..!

பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் வடிவேலு காமெடி வீடியோவை பதிவு செய்து 'எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்

ரெட் கார்டையே கொண்டாட்டமாக மாற்றிய பிரதீப்.. வைரல் புகைப்படங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரெட்கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டது, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

அப்ப எல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா? 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும்  பிரதீப் மீது குற்றம் சாட்டியவர்களை கடுமையாக விமர்சனம் செய்து