படப்பிடிப்பில் தீவிபத்து: பிரபல தயாரிப்பாளர்-நடிகர் காயம்

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

பிரபல தயாரிப்பாளரும் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் இருந்து நடிகராகவும் கோலிவுட் திரையுலகில் வலம் வரும் ஆர்.கே.சுரேஷ், வில்லனில் இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்று மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படம் எஸ்.ஜெய்சங்கர் இயக்கும் 'வேட்டை நாய்'. இவர் ஏற்கனவே அப்புக்குட்டி நடித்த 'மன்னாரு' படத்தை இயக்கியவர்.

இந்த நிலையில் 'வேட்டை நாய்' படத்தின் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் அருகே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அடுப்பில் எரியும் பானைகள், பானையில் கொதிக்கும் நீருடன் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. நாயகன் ஆர்.கே.சுரேஷ் மற்றும் வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் ஆகியோர் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக அடுப்பில் சரிந்து விழுந்த ஆர்.கே.சுரேஷ் மீது வெந்நீர் பானை விழுந்து வெந்நீர் கொட்டித் தீக் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக 'கடுகு' நாயகி சுபிக்சா மற்றும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி , 'என் உயிர்த் தோழன்' ரமா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

More News

20 வருடங்களுக்கு பின்னர் வெளிவரும் 'சிவாஜிகணேசன்' படம்

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான கடைசி படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'பூப்பறிக்க வருகிறோம்'. இந்த படத்திற்கு பின்னர் அவர் சிறிது காலம் உடல்நலமின்றி இருந்தார். பின்னர் 2001ஆம் ஆண்டு காலமானார்...

இந்த நாடே தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது: இளையராஜா நகைச்சுவை

இசைஞானி இளையராஜா சமீபத்தில் கவிக்கோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நாடு தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுபோல நாமும் அதே வழியில் போய் கொண்டிருக்கின்றோம் என்று தற்கால அரசியலை நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

15 வயது சிறுமியுடன் 4வது திருமணம். தடுத்து நிறுத்திய 3 முன்னாள் மனைவிகள்

கடந்த சில காலமாக முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடியும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்...

ரஜினி படத்தை இயக்குவது எப்போது? ராஜமெளலி பதில்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூல் செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை இந்த படம் இன்னும் ஒருசில நாட்களில் நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நீதிபதி கர்ணனுக்கு மனநல பாதிப்பா? மருத்துவர்கள் சோதனை

கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியில் இடம்பெற்று வருபவர் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதால் சுப்ரீம் கோர்ட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகிய நீதிபதி கர்ணன், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஏப்ரல&