முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துணை ஜனாதிபதி பெருமிதம்

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

 

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய வேலையில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கிராமமான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். சிலுவம்பாளையம் ஊர் மைதானத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடியதோடு கிராமியக் கலைகளும் நிகழ்த்தப் பட்டன. அதனைத் தொடர்ந்து ஊரைச் சுற்றியுள்ள விவாசயத் தோட்டங்களைப் பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளுடன் தொழில் நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, தான் அடிப்படையில் ஒரு விவசாயி என்பதைப் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டார். மேலும்  நெற்கதிர்களை அறுவடை செய்யும் விதம் குறித்து விளக்கி, வயலில் இறங்கி சில கதிர்களை அறுத்தும் காட்டினார். அந்தப் புகைப்படங்கள் தமிழக ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைத் தளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விவசாயத்தில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்களைத் தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் ‘தமிழக முதலமைச்சர் ஒரு விவசாயியாக வயலில் இறங்கி வேலை செய்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பழனிசாமி அவர்கள் ஒரு போதும் தனது ஆதாரத் தொழிலான விவசாயத்தை மறக்கவில்லை. இத்தகைய செயல்கள் மக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக அமைகிறது. இன்றைய சூழலில் விவசாயத்தை லாபகரமானதாகவும் தொடர்ந்து செய்யக்கூடிய தொழிலாகவும் மாற்ற வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

More News

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..!

கேரள மாநிலம் ஆலப்புழாவின் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய மாதிரி வடிவம் வெளியீடு; 2024 க்குள் கட்டி முடிக்கத் திட்டம்

இந்திய நாடாளுமன்றம் வட்ட வடிவிலான கட்டிட அமைப்புடன் மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அஜித், ஷாலினிக்கு கஸ்தூரி விடுத்த வேண்டுகோள்!

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சமூக வலைத்தளமாக பயனாளிகளுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான வார்த்தைப்

வீடு முற்றுகை, உருவ பொம்மை எரிப்பு: தீவிரமாகும் ரஜினிக்கு எதிரான போராட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெரியார்

மணிரத்னம் படத்திற்காக த்ரிஷா செய்த உதவி!

மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் பாதிக்கு மேல் உள்ள நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்ற நிலையில் அவர்களில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே