வித்யாபாலனை இரவு விருந்துக்கு அழைத்தாரா அமைச்சர்? திடுக்கிடும் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனை மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் இரவு விருந்துக்கு அழைத்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வித்யாபாலன் நடித்து வரும் ’ஷெரின்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய்ஷா தன்னுடன் இரவு விருந்து சாப்பிட வருமாறு நடிகை வித்யா பாலனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அந்த அழைப்பை வித்யாபாலன் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறுநாள் படக்குழுவினர் காட்டுப்பகுதிக்கு தங்கள் வாகனங்களில் படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்தபோது வனத்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினார். 

இதனை அடுத்து இரவு விருந்தில் விடுத்த அழைப்பை மறுத்ததால் வனப்பகுதியில் நடைபெறவிருந்த படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக மத்தியபிரதேச வனத்துறை அமைச்சர் விஜய்ஷா மீது நடிகை வித்யாபாலன் புகார் கூறியுள்ளார். ஆனால் வித்யா பாலனின் இந்த புகாருக்கு அமைச்சர் விஜய்ஷா மறுப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

பாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்!!!

தமிழகத்தில் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் விதிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து

திமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

வாந்தி என்ற சொல்லை நினைத்தாலே எல்லோருக்கும் குமட்டிக் கொண்டுதான் வரும். ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மீனவன்

சைக்கிளில் சென்ற தமிழ் ஹீரோவிடம் இருந்து செல்போனை பறித்த மர்ம நபர்கள்!

பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் சைக்கிளில் சென்னையின் முக்கிய சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவருடைய விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாலாஜியை கதறி அழவைத்த பிக்பாஸ்: லீக் ஆன வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர் மட்டுமன்றி கரடுமுரடான போட்டியாளர் என்ற விமர்சனம் பாலாஜிக்கு உண்டு. எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் முகத்துக்கு நேரே பேசிவிடுவார்

கால்சென்டர் டாஸ்க்கில் பெஸ்ட் யார்? முதலிடத்தை பிடிக்க போட்டா போட்டி!

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக கால்சென்டர் நடைபெற்று வந்தது என்பதும் இதில் காலர்கல், கால் சென்டர் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டார்கள் என்பதும் தெரிந்ததே