close
Choose your channels

ஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்!!!

Friday, September 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்!!!

 

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை சட்டவிரோதமாக ஒரு கும்பல் விற்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட பின்டு அங் மாகாணத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சோதனையில் ஈடுபட்டபோது அந்நாட்டு போலீசார் ஏற்கனவே பயன்படுத்திய 360 கிலோ ஆணுறைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு கிலோ 0.17 டாலருக்கு வாங்கப்படும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அவர்கள் சுத்தம் செய்து அதன் வடிவத்தை மாற்றி, புதிதுபோல பைகளில் அடைத்து விற்பனைக்கு தயார் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து அந்நாட்டு சமூக நல ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இதுபோன்ற மருத்துவப் பொருட்களில் கடுமையான எச்சரிக்கை தேவை என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அத்தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுபோன்று எத்தனை பேருக்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் விற்கப்பட்டன என்பது பெரும் கவலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அந்தக் கிடங்கில் இருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ஆணுறைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆனால் பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற பொருட்களில் இருந்து உயிரை கொல்லும் கொடிய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.