அம்மா அப்பாவுக்கு திருமண வாழ்த்து கூறிய நயன் - விக்கி குழந்தைகள்: செம்ம புகைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலாவது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இன்றைய திருமண நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் கூடிய பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பாக இரட்டை குழந்தைகளை கையில் வைத்திருந்த நயன்தாராவின் புகைப்படங்களை அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்கள் மூலம் முதல் முதலாக குழந்தைகளின் முகத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நயன்தாராவின் குழந்தைகள் தங்கள் அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செட்டப்பில் ஒரு புகைப்படம் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ,’தேங்க் யூ பாய்ஸ் உயிர் மற்றும் உலகு.. இவ்வளவு அழகான திருமண நாள் கொண்டாட்டத்தை எங்களுக்கு அலங்கரித்து கொடுப்பதில் நீங்கள் இருவரும் எவ்வளவு யோசித்து இருக்கின்றீர்கள்.. இரண்டு தங்கங்களுக்கும் எனது அன்புகள்’ என்று விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

More News

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் உரிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ்

யாஷிகா அம்மாவை அடுத்து ரிச்சர்ட் ரிஷியும் விளக்கம்.. அந்த போட்டோ இதற்காகத்தான்..!

சமீபத்தில் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா?

சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்..! வைரல் புகைப்படம்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இயக்குனர் 'மர்மதேசம்' நாகாவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உறவினர்கள்..!

பிரபல இயக்குனர் 'மர்மதேசம்' நாகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அவர் நலமுடன்

நடிகை கஜோலுக்கு என்ன ஆச்சு? திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கஜோல் கடினமான சோதனையில் இருப்பதாகக் கூறி அனைத்துச் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.