முதல் திருமண நாள்.. நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு..!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர்கள் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இந்த நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் திருமண நாள் குறித்தும் நயன்தாரா குறித்தும் எமோஷனலாக பதிவு செய்துள்ளார். அதில் ’என் உயிரோடு ஆதாரமே நீங்கள் தான், ஒரு வருடம் நிறைய தருணங்கள் நிறைந்தது, ஏற்றத்தாழ்வுகள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனையான நேரங்கள் இருந்தது. ஆனால் அபரீதமான அன்பு பாசம் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் என் குடும்பத்தில் இணைந்தீர்கள்.

கனவுகள் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலும் உன்னால் எனக்கு கிடைக்கிறது. என் உயிர் மற்றும் உலகங்களுடன் சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக வைத்து இருக்கிறேன். குடும்பம் கொடுத்த பலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நல்ல வாழ்க்கையை, தேவையான ஊக்கத்தை கொடுத்த எனஉனக்கு என்னுடைய நன்றி என்று விக்னேஷ் சிவன் எமோஷனலாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை தற்போது வைரலாகி வருகிறது.

More News

வெற்றிமாறனின் துணை இயக்குனர் விபத்தில் மரணம்.. நடிகரின் கார் மோதியதா?

நடிகரின் கார் மோதிய விபத்தில் வெற்றிமாறனின் துணை இயக்குனர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல்வாதி மகனுடன் திருமணம் உண்மையா? மேகா ஆகாஷ் அம்மா விளக்கம்..!

தமிழக அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்ய போவதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் இன்று காலை முதல் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் சமூக வலைதளங்களில் அந்த

கமல்ஹாசன் முதல் மனைவி வாணி கணபதியா இவர்? சுஹாசினி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்..!

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி கலந்து கொண்டதை எடுத்து நடிகை சுகாசினி, நடிகை லிசி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் அவருடன்

நான் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை - நடிகை குஷ்பு

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது .

சவுதியின் மெகா ஆஃபரை ஒதுக்கிய மெஸ்ஸி… அடுத்து அமெரிக்க கிளப்பில் விளையாடுகிறாரா?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வந்த நிலையில் அதிலிருந்து விலகிய பின்பு தற்போது அமெரிக்காவின் இண்டர் மியாமி கிளப்பில் இணைந்து