close
Choose your channels

குலதெய்வம் கோவிலுக்கு சென்ற இடத்தில் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு பொங்கல் வைத்து வழிபாடு செய்த தகவல் வெளியாகியுள்ளது

இன்று சென்னையிலிருந்து திருச்சி வரை விமானத்தில் சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் விமான நிலைய ஊழியர்கள் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். அப்போது ஒரு பெண் செல்பி எடுக்க முயற்சி செய்ததை பார்த்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை உடன் அழைத்து அந்த பெண்ணின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக்கொண்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர்களுடைய மனிதநேயத்தை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து சீரங்கம் கோவில் சென்று சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அதனையடுத்து குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.