ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'காத்து வாக்குல ரெண்டு காதல்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக முன்னணி ஓடிடி ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டு புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற பெரிய ஸ்டார்கள் நடித்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உடல்எடையை குறைத்தது எப்படி? ரகசியத்தை ஷேர் செய்த நடிகை குஷ்பு!

80கள் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இளசுகள் முதல் பெருசு வரை,  பலரின் கனவு நாயகியாக இருந்துவருபவர் நடிகை குஷ்பு. நடிகை, அரசியல் தலைவர், சினிமா தயாரிப்பாளர்,

அந்த இடத்தில் டேட்டூவா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம்வருபவர் ஆண்ட்ரியா. “தரமணி“,

வேறலெவல் போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராஷிகண்ணா!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ராஷிகண்ணா. தற்போது தமிழிலும் பல திரைப்படங்களில் படு பிசியாக நடித்துவருகிறார்.

விராட் கோலி மீது 2 மூத்த வீரர்கள் புகார் கூறினார்களா? பகீர் ரிப்போர்ட்!

பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷாவை தொடர்பு கொண்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்

நடிப்புக்காக பிறப்பெடுத்த நடிகர் திலகம்… சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.