வெள்ளியங்கிரியில் 'எல்.ஐ.சி' படப்பிடிப்பு.. சீமான் - ஜக்கி வாசுதேவ் சந்திப்பு நடக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

இதுவரை எந்த திரைப்படத்திற்கும் அனுமதி வழங்காத வெள்ளியங்கிரி ஈஷா தியான மையம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எல்.ஐ.சி’ படத்திற்காக அனுமதி வழங்கியிருப்பது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது படம் ஒன்றின் படப்பிடிப்பு நடக்க ஈஷா யோகா மையத்தில் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவனுக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையில் தற்போது ‘எல்.ஐ.சி’ படப்பிடிப்பை விக்னேஷ் நடத்தி வருகிறார். சீமான் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய இருவரும் தந்தை மகன் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு போக மீதம் உள்ள ஓய்வு நேரத்தில் சீமான் வெள்ளியங்கிரி மலையை சுற்றி பார்த்ததாகவும், ஈஷா ஆசிரமத்தை சுற்றி பார்த்ததாகவும் குறிப்பாக அங்கே இருந்த மக்களிடம் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஜக்கி வாசுதேவ் சீடர்களிடமும் அவர் பேசியதாகவும் அடுத்த மாதம் மீண்டும் இந்த பகுதியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் நிலையில் அப்போது ஜக்கி வாசுதேவ் - சீமான் சந்திப்பு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.