close
Choose your channels

ராதாரவி பேச்சுக்கு விக்னேஷ் சிவன் ரியாக்சன்!

Sunday, March 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ராதாவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது ரியாக்சனை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பழம்பெரும் நடிகர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இழிவான வகையில் ஒருவரை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு எதிராக எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். அதற்கும் மேலாக தரமற்ற இந்த பேச்சுக்கு கைதட்டி சிரிக்கும் பார்வையாளர்கள் குறித்தும் வருத்தமாக உள்ளது.

ஒரு முழுமை பெறாத படத்திற்கு ஏன் இப்போது புரமோஷன் என்றே தெரியவில்லை. இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஏற்கனவே படத்தில் இருந்து விலகிவிட்ட நிலையில் பொருத்தமில்லாதவர்களை வைத்து நடத்தும் இதுபோன்ற ஒரு புரமோஷன் நிகழ்ச்சி தேவையா?

வேலையில்லாதவர்களை கூப்பிட்டு இதுபோன்ற தகாத கருத்துக்களை வாந்தியெடுக்க செய்வதற்கென்றே ஒரு விழாவா? எப்படியும் இதுபோன்ற சம்பவத்திற்கு நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காது என்பதும் ஒரு சோகமான உண்மை என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.