தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Saturday,January 13 2018]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் நேற்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல ரிசல்ட்டை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்பட படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்

இருப்பினும் வழக்கமான அனைத்து படக்குழுவினர்களுக்கு ஏற்படும் அச்சம் இந்த படத்தின் குழுவினர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதுதான் தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனை. இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களே! உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் இந்த படத்தை வெளியிட வேண்டாம். நாங்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். வரிப்பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் திரையுலகம் எதிர்நோக்கியுள்ள நிலையில் படங்களை கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்து வருகிறோம். எனவே தயவுசெய்து இந்த படத்தை ஆன்லைனில் வெளியிட வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே அருவி, சென்னை டு சிங்கப்பூர் படகுழுவினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழ் ராக்கர்ஸ், விக்னேஷ்சிவன் வேண்டுகோளை ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்