நயனுக்கு முத்தம் கொடுக்கும் விக்கி: வைரலாகும் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஆரம்பித்த இந்த காதல் விரைவில் திருமணம் என்ற அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து அவை வைரல் ஆகி வருவது தெரிந்ததே. நேற்று கூட நயன் மற்றும் விக்கி ஆகிய இருவரும் சிறு குழந்தைகளாக கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் நயன் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் காதல் குறியீடுகளையும் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் பதிவு செய்த இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இருவரும் பொருத்தமான ஜோடிகள் என்றும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பல ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'விக்ரம் 60'

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்

ஊரடங்கால் வருமானம் இல்லை: மளிகைக்கடை ஆரம்பித்த தமிழ் திரைப்பட இயக்குனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருவது தெரிந்ததே. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா? கமல்ஹாசன்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியான நிலையில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி

தமிழக கொரோனா பாதிப்பில் மீண்டும் புதிய உச்சம்:பிற மாவட்டங்களிலும் பரவுவதால் பதட்டம்

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2500ஐ தாண்டியது என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.