close
Choose your channels

அஜித்துக்கு எழுதிய பாடல் வரிகளை நன்றியாக தெரிவித்த விக்னேஷ் சிவன்!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியான நிலையில் அஜித்துக்கு அவர் எழுதிய பாடல் வரிகளையே அவருக்கு நன்றியாக விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அஜித்தின் 62வது திரைப்படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தது

இந்த அறிவிப்பை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இந்த மிகச் சிறந்த வாய்ப்பை கொடுத்த அஜித் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவருடன் ’அஜித் 62’ படத்தில் பணிபுரிவது மிகவும் பெருமைக்குரியது என்றும் இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி தனது மனதில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் இசை அரசன் அனிருத் மற்றும் லைக்கா நிறுவனத்துடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அஜீத் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’அதாரு அதாரு’ என்ற பாடலை எழுதியது விக்னேஷ் சிவன் தான் என்பதும், இந்த பாடலில் இடம்பெற்ற ’எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்’ என்ற வரியை தனது நன்றி டுவிட்டில் விக்னேஷ் சிவன் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos