விஜய்யின் வித்தியாசமான கெட்டப். பர்ஸ்ட் லுக் வரை ரகசியமா?
- IndiaGlitz, [Tuesday,July 14 2015]
சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தை முடித்துவிட்ட விஜய், தற்போது தனது 59வது படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் விஜய், போலீஸ் வேடத்தில் நடிப்பதால், அவருடைய கெட்டப்பை வித்தியாசமாக காண்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அவர் ஏற்கனவே போலீஸ் கேரக்டர்களில் நடித்த போக்கிரி, ஜில்லா போன்ற சாயல்களும், விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் போன்ற படங்களின் கேரக்டர்களின் சாயல் வராதவாறும், விஜய்யின் கெட்டப்பை படக்குழுவினர் வித்தியாசமாக உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் பெரிய மீசையுடன் இதுவரை காணப்படாத கெட்டப்பில் தோன்றவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் இந்த கெட்டப், பர்ஸ்ட் லுக் வரும்வரை ரகசியமாக வைத்திருக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் இந்த படத்தில் குணசித்திர கேரக்டரில் நடித்து வருவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். மேலும் மூன்றாவது நாயகியாக 'காதலில் விழுந்தேன்' புகழ் சுனைனாவும் நடிக்கவுள்ளார். பிரபு மற்றும் ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை அட்லி இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.