சமூக தனிமைப்படுத்துதலில் விஜய்யின் 'மாஸ்டர்' டீம்

  • IndiaGlitz, [Thursday,March 26 2020]

தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சமூகதனிமைப்படுத்துதலை அரசு வலியுறுத்தி வருகிறது. பொதுமக்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் இருந்தாலே இந்த வைரசை இந்தியாவில் இருந்து விரட்டி விடலாம் என்றும் அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அரசு வலியுறுத்தி வருகின்றது.

அரசின் வலியுறுத்தலை பொதுமக்களும் பெரும்பாலும் கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் டீம் ஒருவரை ஒருவர் சமூக தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நேரில் சந்திக்காமல் வீடியோ சாட் மூலமும் ஹேங் அவுட் மூலமும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு சமூக தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகின்றனர்.

இது குறித்து மாஸ்டர் திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் ’பிரச்சினைகள் வரும், போகும். கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. மாஸ்டர் டீமாகிய நாங்கள் சமூக தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்கிறோம் நீங்களும் கடைபிடிக்கின்றீர்களா? என்று கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விஜய், தயாரிப்பாளர் ஜெகதீஷ், அனிருத் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பெப்சியை அடுத்து உதவிக்கரம் கேட்கும் சின்னத்திரை ஊழியர்கள்

பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் உள்பட திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில்

வெளி மாநில கூலி தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய உ.பி போலீசார்..!

வெளி மாநில தொழிலாளிகளுக்கு உதவ சொன்னால் இப்படி அவர்களை கொடுமைப்படுத்துகிறீர்களே என கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

இந்தியாவிலேயே மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா மாநிலம் மாறி வருவது கேரளா மக்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்குமா??? மருத்துவர்களின் அறிவுரை!!!

கொரோனா வைரஸ் பொருட்களின் மேல் தங்கிவாழும் தன்மையுடையது என்ற அறிக்கை வெளியானதில் இருந்து எந்தப்பொருட்களில் எவ்வளவு நேரம் தங்குமோ என்

கொரோனா பாதித்தவர்களுக்கு ரகசியமாக உதவி செய்யும் பிரபல பாடகி

கொரோனா பாதித்த தனது ரசிகர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகி ஆரியானா க்ராண்டே ரகசியமாக நிதியுதவி அளித்து வரும் செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது