விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

விஜய் ஆண்டனியின் நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்' என்ற படத்திலும், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் 'தமிழரசன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'வாய்மை' என்ற திரைப்படத்தை இயக்கிய செந்தில்குமார் என்ற இயக்குனரின் படம் ஒன்றிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இந்துஜா, சத்யராஜ், 'காலா' புகழ் ஈஸ்வரிராவ்,  யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். பொதுவாக விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு அவரே இசையமைப்பார். ஆனால் இந்த படத்திற்கு அகத் என்பவர் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை இன்ஃபினிட்டி பிலின் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் இன்ஃபினிட்டி பிலின் வெஞ்சர்ஸ் அறிவித்துள்ளது.

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை என இரண்டு துறைகளிலும் பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் தற்போது ஐங்கரன், 100% காதல், அடங்காதே, சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில்

ரஜினி, விஜய், சூர்யா படங்களின் பாணியில் 'சாஹோ'

பிரபல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது அந்த படத்தின் குழுவினர்கள் வித்தியாசமாக புரமோஷன் செய்வது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது

இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் உள்ளனர்

வனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் போட்ட திட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் டாஸ்குகளில் சிறப்பாக ஃபெர்மான்ஸ் செய்தவர்கள், மோசமாக ஃபெர்மான்ஸ் செய்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு

அது ரஜினியோட கருத்து, இது என்னோட கருத்து: காஷ்மீர் பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி

காஷ்மீர் பிரச்சனை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கருத்தையும், இந்த கருத்துக்கு முற்றிலும் எதிராக விஜய்சேதுபதி ஒரு கருத்தையும் ஒரே நாளில் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.