விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' அப்டேட் தந்த படக்குழுவினர்!

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ’கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் உருவான ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை அனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து கடந்த மே மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் பாடல் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லம் ஆந்தெம்’ என்று தொடங்கும் இந்த பாடல் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் போலவே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணியையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

12 மாம்பழங்களை ரூ.1.20 லட்சத்திற்கு வாங்கிய தொழிலதிபர்: காரணத்தை கேட்டால் அசந்துவிடுவீர்கள்!

ஒரு மாம்பழம் ரூபாய் பத்தாயிரம் என 12 மாம்பழங்களை 1.20 லட்சம் ரூபாய்க்கு தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அப்படி என்ன அந்த மாம்பழத்தில் ஸ்பெஷல் என்றால் எதுவுமே இல்லை

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

முதல் முறையாக தமிழில் வெளியான தனிப்பாடல் ஒன்றுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது

மக்கள் நீதி மய்யத்தில் புதிய அதிகாரிகள்....! பழ. கருப்பையா-விற்கு முக்கிய பொறுப்பு....!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின், கட்சி ஆலோசராக பழ. கருப்பையா அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார். இக்கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ள கமல் அவர்கள், இனி கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வகிப்பார்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் குறித்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாக முடியாத

சதம் அடித்த பெட்ரோல்… மத்திய அரசின் வரிக் கொள்ளை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் காட்டம்!

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது.