பாகிஸ்தான் மக்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி


Send us your feedback to audioarticles@vaarta.com


பாகிஸ்தான் மக்கள் நம்மை போலவே மகிழ்ச்சியையும், அமைதியையும் விரும்புபவர்கள் என நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பெஹல்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும், பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக கூறப்படுவதால், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த தாக்குதலை கண்டித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், விஜய் ஆண்டனி சற்று வித்தியாசமாக பதிவு செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், ’காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மை போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்’ என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு பல நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
— vijayantony (@vijayantony) April 27, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com