நயன்தாராவின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக விஜய் ஆண்டனி?

  • IndiaGlitz, [Tuesday,September 17 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மலையாள திரைப்படமான ’லவ் ஆக்சன் டிராமா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதியை படக்குழுவினர் அணுகினர். ஏற்கனவே விஜய்சேதுபதி, ஜெயராம் உடன் மார்கோனி மாத்தாய்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளதாலும், அவர் இந்த படத்தின் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் கருதியதாலும் அவரிடம் கதை கூறப்பட்டது.

விஜய்சேதுபதிக்கு படக்குழுவினர் கூறிய கதையும் தன்னுடைய கேரக்டரும் பிடித்து இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் படக்குழுவினர் கேட்ட தேதியை அவரால் கொடுக்க முடியாததால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை

இதனை அடுத்து படக்குழுவினர் விஜய்ஆண்டனியை அணுகி, அவரை இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இதனை அடுத்து விஜய் ஆண்டனி, நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டது. விபின் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

More News

போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது! அறிவாலயம் காரணமா?

சமீபத்தில் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து துரதிஷ்டவசமாக மரணமடைந்த நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள்

அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி!

அஜித் நடித்த 'முகவரி', சிம்பு நடித்த 'தொட்டி ஜெயா' போன்ற படங்களை இயக்கியவர் V.Z துரை. நீண்ட இடைவெளிக்கு பின் இவர் இயக்கிய 'இருட்டு' என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

'பிகில்' ரிலீஸ் தேதி குறித்து அர்ச்சனா கல்பாதியின் முக்கிய அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது மின்னல் வேகத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டாஸ்க்கில் அசத்திய கவின் - லாஸ்லியா: காதலை மறந்து டைட்டிலை நோக்கி பயணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் காய் நகர்த்தி சாமர்த்தியமாக விளையாடி கொண்டிருந்தபோது ஒருசில வாரங்களில் எதற்காக வந்தோம்

கூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில் 7 போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் முண்டியடித்து டைட்டிலை வென்றிட தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.