close
Choose your channels

பாசம் மனசுக்குள் இருந்தால் போதும்: ரசிகனை நெகிழ வைத்த விஜய்

Sunday, October 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்பதும், ரசிகர்களின் வீடுகளில் நடைபெறும் இன்பதுன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு விஜய்யை அவருடைய வீட்டில் சந்தித்த போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை கூறியுள்ளார். விஜய் குறித்த டாட்டூவை தனது உடலின் பல பாகங்களில் பதிவு செய்திருந்ததை இந்த சந்திப்பின்போது அந்த ரசிகர் விஜய்யிடம் காண்பித்துள்ளார். இந்த டாட்டுக்களை பார்த்த விஜய், ‘பாசம் மனசுக்குள் இருந்தால் போதும்’ இதெல்லாம் தேவையில்லை’ என்று கூறியதாகவும் பேட்டி ஒன்றில் விஜய் ரசிகர் கூறியுள்ளார்.

மேலும் ‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரம் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது இயக்குனர் பரத் காரில் விஜய் சென்று கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில் தான் ஆட்டோவில் சென்றதை பார்த்ததும், விஜய் உடனே ஆட்டோவை நிறுத்தி ’நான் இந்த ஆட்டோவில் வரலாமா? என்று விஜய் கேட்டார். அவர் கேட்டதை பார்த்து நானும் எனது ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளும் ஆச்சரியம் அடைந்தோம். பின்னர் என்னுடைய ஆட்டோவில் பயணிகளுடன் பயணியாக விஜய் பயணம் செய்ததை என்னால் மறக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.