குட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

குட்டி தளபதி என்று அழைக்கப்படும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சயை விரைவில் திரையுலகில் எதிர்பார்க்கலாம் என சமீபத்தில் விஜய்யின் பெற்றோரை சந்தித்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மகேஷ் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்யின் பெற்றோர் தங்களுடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் ஏற்கனவே இரண்டு முறை அவர்கள் வந்திருந்தாலும் இந்த முறை தான் அவர்கள் கையால் சுட்ட தோசையை நாங்கள் சாப்பிட்டதாகவும் கூறினார்.

மேலும் தளபதி விஜய்யை அடிக்கடி தான் சந்தித்து இருப்பதாகவும் தன்னுடைய பிறந்த நாளின் போதும் விஜய்யின் பிறந்த நாளின் போதும் அவர் போனில் வாழ்த்து கூறுவார் என்றும் பிறந்தநாள் அன்று செய்த நற்பணிகள் குறித்து அவர் விவரமாகக் கேட்டு சந்தோஷம் கொள்வார் என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் தம்பியை தான் ஐந்தாறு முறை சந்தித்து உள்ளதாகவும் கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் அவரை விரைவில் திரையுலகில் எதிர்பார்க்கலாம் என்றும் தளபதி விஜய்யை விட பல மடங்கு அவர் பெரிய ஆளாக வருவார் என்றும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

More News

ஆளாளுக்கு ஒருவிதமா பேசுறாங்களே! ரஜினி-பெரியார் விவகாரம் குறித்து கஸ்தூரி

பெரியார் குறித்து அவமரியாதையாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக ஒரு சில அதிமுக அமைச்சர்கள் ரஜினிக்கு

நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் இணையும் ரஜினி-கமல்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' என்ற படத்தில்தான் கடைசியில் நடித்தனர்.

'தலைவர் 168' படத்தின் டைட்டில் இதுவா? கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'தலைவர் 168' இந்த படத்தில் மீனா,

நடிகர் சங்க தேர்தல் வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால்

வீடியோ கேம் விளையாடி 3 மில்லியன் டாலர் ஜெயித்த இளைஞர்!

16 வயது இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாடி மூன்று மில்லியன் டாலர் வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது