close
Choose your channels

நெய்வேலியில் விஜய் ரசிகர்கள் மீது தடியடி: பெரும் பரபரப்பு

Friday, February 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடம் அருகே பாஜகவினர் இன்று மாலை திடீரென குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது என பாஜகவினர் கோஷமிட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து செய்தி அறிந்த விஜய் ரசிகர்களும் என்எல்சி வாசலில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பாஜகவினர் ஒரு சிலர் மட்டுமே போராட்டம் நடத்திய நிலையில் திடீரென நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பதட்ட நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி என்எல்சி சுரங்க வாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பாஜகவை கண்டித்தும், விஜய்க்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான அடி நடத்தி கூட்டத்தை கலைத்து அங்கு இயல்பு நிலையை ஏற்படுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.