close
Choose your channels

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: விஜய் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தை செய்து வருவதால் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி அவதியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றான திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் விஜய் ரசிகர்களின் முயற்சியால் 2 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆசிரியர்களால் அந்த பள்ளி மாணவர்கள் எந்தவித பிரச்சனையும் இன்று பாடம் படித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த செய்கைக்கு சமூக வலைத்தள பயனாளி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் அந்தப் போராட்டத்தைக் கேலி செய்யும் நோக்குடனோ அல்லது அதன் பாதிப்பைக் குறைக்கும் நோக்குடனோ இது போன்ற செயலில் ஈடுபடுவது விஜய் ரசிகர்களுக்கு அழகல்ல. விஜய்யும் திரைப்பட வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.