close
Choose your channels

தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான உதவி

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின் மதிப்பு பலருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தூய்மை பணியாளர்களுக்கு மரியாதையும் நிதி உதவியும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க்குகள், கையுறைகள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு உட்பட பல்வேறு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்களை கோவை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கி உதவி செய்தனர்.

மேலும் கோவை சிஎம்சி காலனியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களையும் வழங்கி, சுகாதாரமற்று இருக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட பொறுப்பாளர் சம்பத்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.