close
Choose your channels

10 நாட்களை கடந்தும் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வரவேற்பு!

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் அதன் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இணைந்து மெழுகுவர்த்திகளை ஏற்றி மாஸ்டர் படத்தை வரவேற்று உள்ளனர். மேலும் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு அவர்கள் நன்றியும் தெரிவித்து உள்ளனர். இந்நிகழ்வு விஜய் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போதுதான் திறக்கப்பட்டு உள்ளன. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய பின்னர் முதன் முதலில் மாஸ்டர் திரைப்படம்தான் திரைக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதியே திரைக்கு வந்து விட்டது. தற்போது 10 நாட்களை கடந்து விட்டப் பின்னரும் ரசிகர்கள் ஆங்காங்கே இப்படத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.