close
Choose your channels

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்!

Saturday, June 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகின்றதோ அப்போதெல்லாம் முதல் நபராக களத்தில் இறங்கி உதவி செய்பவர்கள் தளபதி விஜய் ரசிகர்களாக தான் இருப்பார்கள் என்பது ஏற்கனவே அறிந்தது.

அதேபோல் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக மக்கள் ஊரடங்கால் தவித்து வரும் நிலையில் இந்த ஊரடங்கின்போது பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் நல்வழியில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலில் கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வறுமையில் வாடும் 100 திருநங்கைகள் மற்றும் 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்ட இந்த உதவிகள் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.