close
Choose your channels

ஒரே ஒரு புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்த விஜய்யின் தந்தை!

Thursday, March 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ ஏ சந்திரசேகர் ஒரே ஒரு புகைப்படத்தை மனமுடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பலர் இன்னும் உள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது விஜயகாந்த் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். இவரா இப்படி இருக்கிறார்? என்று கூறிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரை பார்க்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன் என்றும், ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை என்று கூறினார்.

மேலும் நட்பு என்றால் என்ன? நட்பிற்கு இலக்கணம் என்றால் என்ன? என்பதை விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிறந்த மனித நேயம் மிக்கவர் என்றும் அவருக்கு இப்படி ஒரு நிலையா? பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என்றும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பேட்டியில் விஜயகாந்து உடனான திரையுலக அனுபவம் குறித்த தனது நினைவுகளையும் எஸ்.ஏசி. பகிர்ந்து கொண்டார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.